உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி !

உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி !

காட்டு  விலங்குகள் ஒற்றுமையாய் 
நாட்டு மனிதர்கள் வேற்றுமையாய் 
உயர்திணை யார் ?

சிங்கமும் புலியும் சிநேகமாய் 
மனிதனும் மனிதனும் பகையாய்
உயர்திணை யார் ?
 
பசிக்கும்போது  இரை தேடும் விலங்கு
எப்போதும் இரை தேடும் மனிதன் 
உயர்திணை யார் ?

சாதி மதச் சண்டை இல்லா விலங்குகள் 
சாதி மதச் சண்டை இடும் மனிதர்கள் 
உயர்திணை யார் ?

நன்றி மறவாத நாய் 
நன்றி மறக்கும் மனிதன் 
உயர்திணை யார் ?





கருத்துகள்