உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !



உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !
தந்தை ! கவிஞர் இரா .இரவி !

உறவுகளில் உன்னதமானவர் !
உறவுகளுக்காக உழைப்பவர் !

உறக்கம் குறைப்பவர் !
உணர்வில் குன்றானவர் !

பாசத்தில் இமயமானவர் !
பண்பில் சிறந்தவர் !

தன்னலம் மறப்பவர்
தன்குடும்ப நலம் காப்பவர் !

ஓடாய் உழைத்துத் தேய்பவர் !
ஒருபோதும் வருதாதவர்  !

சேயுக்கு சிகரம் தருபவர் !
சிந்தையைச் செதுக்குபவர் !

உயர்ந்திட  ஏணியானவர் !
உருகிடும் மெழுகானவர் !

ஒளிர்ந்திட எண்ணையானவர் ! 
ஒழுக்கம் கற்பித்தவர் !

முன்மாதிரியாக வாழ்பவர் !
முகம் என்றும் வாடதவர் !

கடமையை கண்ணாக மதிப்பவர்
மடமையை மனதில் நீக்குபவர் !

உலகத்தை பற்றி உணர்த்துபவர் !
ஒய்வை என்றும் அறியாதவர் !


பாதை போட்டுத் தருபவர் !
பண்பை பயிற்றுவிப்பவர் !

பயம் நீங்கிடச்   செய்பவர் !
பாசம் ஊட்டி வளர்ப்பவர் !

குழந்தைகள் மணக்க சந்தனமானவர் !
கூடி இருப்போர் போற்ற வைத்தவர் !

தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !
  
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்