துளிப்பா ! பூங்கொத்து ! கவிஞர் இரா .இரவி !

துளிப்பா ! பூங்கொத்து ! கவிஞர் இரா .இரவி !



வரவேற்க வழங்குகிறோம்
வாங்கியவர் மகிழ்கின்றார்
பூங்கொத்து !

கற்காலம் தொடங்கியது
கணினி காலமும் தொடர்கிறது
பூங்கொத்து !

வரவேற்பில் முதலிடம்
வாங்கியவர் மலர்கின்றார்
பூங்கொத்து !

ஒரு நாள் வாழ்க்கை
ஒரு கவலையும் இல்லை
பூங்கொத்து !

எங்கோ பூத்த பூக்கள்
இணைந்தன கொத்தாக
பூங்கொத்து !

முக்கியமான இடங்களில்
சோதனை செய்யப்படும்
பூங்கொத்து !

மலர்களைப் பறிப்பதை
விரும்பாதவர்கள் விரும்புவதில்லை
பூங்கொத்து !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்