படித்ததில் பிடித்தது ! நன்றி திரு .தமிழ் அரசு

படித்ததில் பிடித்தது !
நன்றி திரு .தமிழ் அரசு 
இனிய வணக்கம்..
..................................
இன்றைய நாள் உற்சாகமும்,உத்வேகமும் தரும்
நாளாக தங்களுக்கு அமையட்டும்..
இன்றைய சிந்தனை..
...................................

வாழ்க்கை வாழ்வதற்கே....
.................................................

மனம் ஒரு அறிய மருந்து.
அதை எம்போதும் உற்சாகாத்தோடு வைத்து கொள்ளுவது ஒரு வைகயான கலை.
முதலில் தோல்வி வரும் போது ஏதோ நமக்கு நிகழும் ஒரு நிகழ்வாக பார்க்கும் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி கொள்ளுங்கள்.
என்றாவது நமக்கு சாதகமான நிகழ்வுகள் நடக்கும் போது,
இது நமக்கு மட்டுமே நிகழ்வதாக நினைத்ததுண்டா..? இல்லையே,,

சிறிது நினைவுபடுத்தி பாருங்கள்.
இல்லை என்ற பதில் தான் நமக்கு கிடைக்கும்.
ஆனால் பாதகமான நிகழ்வுகளுக்கு மட்டும் நமக்கு மட்டுமே நிகழ்வதாக நினைத்து மனதை சோர்வடைய செய்கிறீர்கள்.
அதற்கு மாறாக நமக்கு சாதகமான நிகழ்வுகள் வரும் போது நாம் அதை நினைத்து உற்சாகம் அடைந்து கொள்ளவேண்டும்.
நன்றாக நினைவு படுத்தி பார்த்தால் நமக்கு சாதகமான நிகழ்வுகள் தான் அதிகமாக நிகழ்திருக்கும் .
ஆனால் மனம் அதில் லாயிப்பதில்லை. பதிலாக எப்போதாவது நடக்கும் பாதகமான நிகழ்வுகளை மட்டும் மீண்டும், மீண்டும் நமக்கு மட்டுமே நடப்பதாக எண்ணி கொண்டு மனதின் கீழ் நோக்கி பயணத்திற்கு தயார்படுத்தி கொண்டிருக்கிறோம் .
இதுவரை நடந்த சாதகமான நிகழ்வுகளை திரும்பி பார்ப்பதை காட்டிலும், இன்றிலிருந்து இனிமேல் வருகின்ற சாதகமான நிகழ்வுகள் எந்தனை நம் வாழ்வில் என்று எண்ணிப்பாருங்கள்.
இந்த நிகழ்வு நமக்காக நிகழ்வதாக எண்ணி மகிழுங்கள்.
பாதகமான நிகழ்வுகள் அனைவருக்கும் நிகழகூடியதுதான்.
அதை நினைத்து வருந்தி மனதை மேலும் மேலும் உற்சாகம் இழக்க வைப்பது உங்களுக்கு நீங்களே எதிரியாகி விடுவீர்கள்.
சாதகமான நிகழ்வுகளை உங்கள் நினைவில் வைத்து கொண்டு வாழ பழகிக் கொள்ளுங்கள்.
வழக்கையின் இன்பம் தெரியும்.
வாழ்வது சுலபம் என்பது புரியும்.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
.

கருத்துகள்