நெல்லுக்குள்ளே அரிசி
சொல்லுக்குள்ளே மொழி
கண்ணுக்குள்ளே காதல் !
துடைப்பக்கட்டைக்கு
பட்டுக் குஞ்சலம்
தூய்மை இந்தியா !
துரும்பு தூணாகாது
தூண் துரும்பாகும்
நில நடுக்கம் !
தேன் எடுத்தவன்
புறங்கை நக்கவில்லை
சர்க்கரை நோயாளி !
தேவையைக் குறைத்தால்
தேவையில்லை கடன்
நிரந்தரம் நிம்மதி !
நல்ல காரியத்துக்கு
நானூறு இடைஞ்சல்
சேதுசமுத்திரத் திட்டம் !
எலும்பில்லா நாக்கு எதுவும் பேசும்
நேர்மைக்கு வேண்டாம்
அச்சம் !
நல்ல மாடு விலை போகவில்லை
வாங்கப் பணம் இல்லை
உள்ளூரில் !
நாக்கு புரண்டாலும்
வாக்குப் புரளாது
முதியோர் !
தானம் தந்த மாட்டை
பல் எண்ணிப் பார்க்கும்
இலங்கை !
.
தாய் எட்டடி
குட்டி பதினாறடி
இளைய சமுதாயம் !
தாயும்
விலைக்கு கிடைக்கும்
வாடகைத்தாய் !
திறந்த வீட்டில்
நாய்கள் நுழைந்தனப் போல
பன்னாட்டு நிறுவனங்கள் !
திறந்த கதவுக்குத்
திறவுகோல் தேடினான்
முட்டாள் !
தீராக் கோபம்
போராய் முடியும்
காக்க சினம் !
தீய வாழ்க்கை
மரணம் போல
சண்டியர் !
உண்மை
பூச்சி பறந்தால்
வரும் மழை !
துணிந்தவர்களுக்கு
துக்கம் இல்லை
இலட்சியவாதிகள் !
நார் இல்லாமலும்
தொடுக்கலாம் மாலை
உள்ளது நூல்!
பிறப்பும் இறப்பும்
நீரால்
உப்பு !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ஒவ்வொன்றும் அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி