மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் குழந்தைகள் , மாணவர்கள் ,பெண்கள் ,பெரியவர்கள், தொகுப்பாளர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் சொன்ன நகைச்சுவைகள் !

 தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

ஒருவர் ; லட்டுப் போல பொண்ணுப் பார்த்து கட்டி வைத்தியே எப்படி இருக்கா ?
மற்றவர் ;பூந்திப் போல குடும்பத்தை உடைத்து மகனை பிரித்து தனி குடித்தனம்  போய் விட்டாள்.   
----------------------------------------------------------------
நோயாளி ;நீங்க கடைசியா எழுதி உள்ள மருந்து எங்குமே கிடைக்க  வில்லை .
மருத்துவர் ;.எங்குமே கிடைக்காது .அது என் கையெழுத்து .   
----------------------------------------------------------------
செவிலியர் ;அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில் புத்தகம் படிக்கிறீர்கள் 
மருத்துவர் ;.சிறுநீரகம் எங்கு இருக்கும் என்பது மறந்து போச்சு. புத்தகத்தில் பார்க்கிறேன் .
---------------------------------------------------------------
மருத்துவ் பேராசிரியர் ;ஆண் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருந்த வகுப்பில் கர்ப்பபையைக்  காட்டி இது என்ன தெரியுதா ? என்றார்.
பலரும் யோசித்தனர் .
மருத்துவ் பேராசிரியர் ; உனக்கும் எனக்கும் இல்லாதது அது என்ன? என்றார் 
மாணவன் ; மூளையா ? என்றான் . 
-------------------------------------------------------------------------------------
10000 ரூபாய் 20000  ரூபாய் செலவு செய்து சுற்றினால் சுற்றுலா என்கின்றனர் .
10 ரூபாய் 20  ரூபாய் செலவு செய்து சுற்றினால் தண்டச்சோறு என்கின்றனர் .
---------------------------------------------------------------------------------------
செவிலியர் ; நாளைக்கு நீங்க அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த நோயாளி 10 வது மாடியில்   இருந்து குதித்து இறந்து விட்டார் .
மருத்துவர் ; அசச்சோ அவசரப்பட்டு விட்டாரே .
-------------------------------------------------------------------------------
ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
மூக்கு மேலே இரண்டு  ஐஸ் ( eyes)  இருக்கு அதனால ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
---------------------------------------------------------------------------
கரும்புச்சாறு எடுக்கும் குடும்பத்தார்க்கு மருமகளாகப் போனது தப்பாப் போச்சு  .
ஏன்?
சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகின்றனர் .
--------------------------------------------------------------------------
மருத்துவர் ; உங்க குழந்தையின் எடை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே ,உங்க கணவர் எங்க வேலை பார்க்கிறார் .
வந்தவள் ;  ரேசன் கடையில் .  
-------------------------------------------------------------------------
மேங்கோ( mango )  பிரித்தால் என்ன வரும் ?
man go என்று  வரும்  .
------------------------------------------------------------------------
மழை மேகம் பிரிந்தால் என்ன வரும் ?
மழை me  come என்று  வரும்
--------------------------------------------------------------------------
ஒருவர் ; என் மனைவி பல் விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள் .
மற்றவர் ; அது பரவாயில்லைங்க என்  மனைவி பாத்திரங்கள்  விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள்
------------------------------------------------------------------------
24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது ?
சாக்கடை .
------------------------------------------------------------------------
அரசர் ;நீங்கள் பாடும் பாடலில்  அரிவாள் ,கத்தி , கம்பு வருகின்றதே ஏன்?
புலவர் ; அரசே நீங்கள்தானே பாடும் பாடலில் பொருள் இருக்க வேண்டும் என்றீர்கள்   .
----------------------------------------------------------------------

 பாலைவனத்தில் காகிதம் கிழிந்தால் ஒட்ட கவலை வேண்டாம் .
ஒட்ட     கம் இருக்கின்றதே  !
-------------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் ; நாம கிட்ட  இந்த வீடு போக வேறு வீடு உள்ளது அதை விற்க வேண்டும் .பத்திரிகையில் விளம்பரம் கொடு என்றார் .
மகன் என்அப்பாவின் சின்ன வீடு விற்பனைக்கு உள்ளது என்று    விளம்பரம் கொடுத்து விட்டான் .
----------------------------------------------------------------
பேரன் ; சின்ன வீடு என்றால் என்ன   தாத்தா.
 தாத்தா; அது எதுக்கு உனக்கு .
பேரன் ; சும்மா தெரிஞ்சு வைத்துக் கொள்ளலாமேன்னு  கேட்டேன் .
தாத்தா; தெரியாமல் வைத்துக் கொள்வதுதான் சின்ன வீடு .
-------------------------------------------------------------------------
.
நோயாளியை கூட்டிட்டு வரலாமா ?
மருத்துவர் ; கூட்டிட்டு வாங்க ! தூக்கிட்டுப் போங்க !
-----------------------------------------------------------------------
சாப்பிட முடியாத பன் எது ?
ரிப்பன் .
-----------------------------------------------------------------
உங்க அப்பா தினமும்  சீனி டப்பாவை ஏன் திறந்து  பார்க்கிறார்  ?
மருத்துவர் தினமும்  சுகர் செக் பண்ண சொல்லி இருந்தார் .
-------------------------------------------------------------------
கணவன் ; சாமிகிட்ட என்ன வேண்டினாய்?
மனைவி ; அடுத்த பிறவியிலும் நீங்கதான் எனக்கு கணவராக வர வேண்டினேன் .
மனைவி ;சாமிகிட்ட நீங்க என்ன வேண்டினீர்கள் .
கணவன் ; எனக்கு அடுத்த பிறவியே இருக்கக் கூடாது என்று வேண்டினேன் .
----------------------------------------------------------
சொர்க்கத்தில் கணவனையும் ,மனைவியையும் பிரித்து வைத்து இருப்பார்களாமே .
அதுனாலதான் அதன் பெயர் சொர்க்கம் என்கின்றனர் .
--------------------------------------------------------------
மண்டை  உடையாம இருக்க தலைக்கவசம் போடுகின்றனர் .
தலைக்கவசம்  உடையாம இருக்க யாரவது  மண்டையைப் போடுறாங்களா ?
-------------------------------------------------------------
உங்க ஊரில் யாரவது பெரிய மனிதர்கள் பிறந்து இருக்கிறார்களா ?
எங்க ஊரில் யாருமே பெரிய மனிதராகப் பிறப்பதில்லை .எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றனர் .
-----------------------------------------------------------------------
கோழிக்கு முந்திரிப் பருப்புப் போட்டு வளர்த்தாலும் அது முட்டைதான் போடும் .
100 மதிப்பெண் போடாது .
-------------------------------------------------------
என் மனைவி மாதிரி யாரும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க முடியாது .
 தொலைக்காட்சியைக் கட்டிப் பிடித்து அழுது கிட்டே பார்ப்பாள் .
--------------------------------------------------------------------------
கிளி ஏன் பச்சையா இருக்கு ?
அது பச்சைக்கிளி அதுதான்  பச்சையா இருக்கு .
-------------------------------------------------------------------------
மருத்துவர் ; ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்து இருந்தால் இவரைக் காப்பாற்றி இருக்கலாம் .
வந்தவர் . விபத்து நடந்தே கால் மணி நேரம்தான் ஆகுது . 
-------------------------------------------------------------------------

ஏன் தண்ணீர் தெளித்து கோலம் போடுகின்றனர் .
கோலம் போட்டு தண்ணீர் தெளித்தால் கோலம் அழிந்து விடும் . 
--------------------------------------------------------------------------------
அடக்கமான பெண் வேண்டும் .
அப்ப நீங்க சுடுகாட்டுக்குதான்  போக வேண்டும் .   
------------------------------------------------------------------------
 கண் மங்கலாகத் தெரியுது கண்ணாடி போடணுமா ? டாக்டர் .
கண்டிப்பா போடணும் நான் மருத்துவர் இல்லை காவலர் .   
-----------------------------------------------------------------
கண் அறுவை சிகிட்சை முடிந்து அந்த நோயாளியிடம் கேட்டனர் அந்த கார் எண் சொல்லுங்க.
கார் எங்க இருக்கு     டாக்டர்.
-------------------------------------------------------

தயாரிப்பாளர் ; வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்க .
இயக்குனர் ; ஒரு பேய் செத்து மனிதனாகப் பிறக்கின்றது .மனித வாழ்க்கை வெறுத்து செத்து  திரும்ப  பேய் ஆகி விடுகிறது .
தயாரிப்பாளர் ;இப்படி எடுத்தால் மக்கள் நம்புவார்களா ?
இயக்குனர் ;ஒரு ஈ  வந்து  பழி வாங்குவதை நம்பினார்கள் படம் ஓடியது .இதையும் நம்புவார்கள் படம் ஓடும் .
-------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் பிரம்பை ஓங்கினார் .அதை மாணவன் பிடித்தான் .ஆசிரியர் சொன்னார் .இந்தப் பிரம்பைப் பிடித்து இருப்பவன் முட்டாள் என்றார் .
அதற்கு மாணவன் ; இந்த முனையா  ?  அந்த   முனையா ? என்றான்
-----------------------------------------------------------------------------
நாட்காட்டி கிழிப்பவனைப்   பார்த்து நாட்காட்டி கேட்டது .என்ன செய்து கிழித்து விட்டாய் என்று என்னை கிழிக்கிறாய் .
-----------------------------------------------------------------------------
அப்பா மகனிடம் பல வேலை சொல்லியும் கேட்காததால் வெறுத்து .உன்னை பெற்றதற்கு ஒரு எருமையை பெற்று இருக்கலாம் என்றார் .
மகன் ; எங்க அம்மாவை கட்டாமல் ஒரு எருமையை கட்டி இருக்க வேண்டும் .
--------------------------------------------------------------------------------


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்