படித்ததில் பிடித்தது ! சோதிடம் என்பது அறிவியலா?மயில்சாமி அண்ணாதுரை !

படித்ததில் பிடித்தது !
சோதிடம் என்பது அறிவியலா?மயில்சாமி அண்ணாதுரை !
கேள்வி: சோதிடம் என்பது அறிவியலா? வானத்தில் உள்ள கோள் களைச் சோதிடர்கள் தங் களுக்குச் சாதகமாக்கிக் கூறுகிறார்கள். இதைப்பற்றி தங்களுடைய கருத்து என்ன?
பதில்: இந்தக் கேள்விக்கு என்னுடைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாவது வகுப்புத் தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கி றேன். அப்போது ஒரு சோதிடர் எனக்குச் சோதி டம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பாவிற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார். என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக்கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது. நான் எஸ்.எஸ். எல்.சிக்கு மேலே தேற மாட்டேன். அது எந்த அளவிற்கு பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத் திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ். எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னுடைய அனுபவத்தில் சோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் சோதிடமும், வானியலும் ஒன்று இல்லை. அறிவியல் படி அது சரி யில்லை என்பது என்னு டைய கருத்து.

கருத்துகள்