பெண்ணின் குரல் ! கவிஞர் இரா .இரவி !

பெண்ணின் குரல் !    கவிஞர் இரா .இரவி !

பெண்ணை ஒரு புறம் தெய்வம் 
என்கிறாய் !

பெண்ணை மறுபுறம் காயப்படுத்துகிறாய் 
ரணப்படுத்துகிறாய் !

மேடையில் ஆண் பெண் சமமென்று 
முழக்கமிடுகிறாய் !

இல்லத்தில் பெண்ணை மதிக்காமல் 
ஆட்டிப்படைக்கிறாய் !

அவள் உள்ளத்து உணர்வுகளுக்கு 
மதிப்பளிக்க மறுக்கிறாய் !     
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்