மின்மினி ஆண்டு விழா புகைப்படங்கள்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
தமிழ்த்தேர் பவனி மீண்டும் ஆரம்பம்!! "விடுதலை" என்னும் தலைப்பில் உங்கள் கவிதைகள் வந்து சேரட்டும் 07.08.2014 க்குள்..(மாத இதழில் இடம்பெற) Kaviri Maindhan kaviri2012@gmail.com
விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
மனிதஇனம் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா !
உயிரினங்கள் யாவையும் விரும்புவது விடுதலை !
எந்தப் பறவையும் கூண்டை விரும்புவதில்லை !
எந்த விலங்கும் கூண்டை விரும்புவதில்லை !
மனிதர்கள் பிறர் ஆதிக்கத்தை விரும்புவதில்லை !
.மனிதர்கள் பிறருக்கு அடிமையாக விரும்புவதில்லை !
.மனிதர்கள் பிறருக்கு அடிமையாக விரும்புவதில்லை !
விட்டு விடுதலையாகிடவே விரும்புகின்றனர் !
கட்டுண்டு துன்பத்தால் வாடுவதில் உடன்பாடில்லை !
விடுதலை போராட்டத்திற்கு வரலாறு உண்டு !
விடுதலைக்கு அறவழி ஆயுதவழி இரண்டுமுண்டு !
அறவழியில் போராடி சாத்தியமாகாத போது !
ஆயுதவழிக்கு ஆயத்தமாகின்றனர் சிலர் !
தன்னைப் போலவே பிறரை நேசித்தால் !
தரணியில் ஆண்டான் அடிமை இருக்காது !
உயர்ந்தவன் என்று எண்ணி பிறரைத் தாழ்த்துவதால் !
உயரம் இழந்து கீழே வீழ்ந்து விடுகின்றனர் !
உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் !
உணர்ந்திட்டால் சண்டைகள் இல்லை !
உனக்குள்ள உரிமைகள் அனைத்தும் பிறருக்கும் !
உண்டு என்பதை புரிந்தால் நடத்தல் நன்று !
வானிலிருந்து வந்தவர் எவருமில்லை !
மண்ணிலிருந்து வந்தவர்தான் எவரும் உணர்க !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்
கருத்துரையிடுக