காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

ஒரே மாதிரி உருவம் 
கொண்டவர்கள் எழு பேர் 
உள்ளனர் என்பது பொய் !
என்னவள் போல உருவம் 
கொண்ட வேறு ஒருவரும் 
உலகில் இல்லை !
அவள் போல அவள் மட்டுமே !
---------------------------------
படித்த படிப்பு
மறந்து விடுகின்றன !
பாவையை பார்த்த 
பார்வை மறக்க 
முடியவில்லை !
-----------------------------------
சிக்கி முக்கி கற்கள் உரசி 
தீயை கண்டுபிடித்தான் 
ஆதி மனிதன்  !
அவள் பார்வை என் பார்வை உரசி 
காதல் தீ கண்டுபிடித்தோம் !
 --------------------------------------
ஒரே ஒரு புன்னகை செய்தாள்
ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தன ! 
---------------------------------
பெண்ணும் புயலும் ஒன்று !
அதனால்தான் 
புதிய புயல்களுக்கு 
பெண்கள் பெயர் 
சூட்டுகின்றனர் ! 
----------------------------------
காற்று இல்லா 
வெற்றிடத்தில் 
மணி ஒலித்தாலும் 
ஓசை கேட்பதில்லை !
அவளிடம் நான் வைத்த
வேண்டுகோள் 
அவளுக்கு 
கேட்கவில்லை !
--------------------------------
பிரபல ஓவியர்கள் 
பலரிடம் 
அவளின் புகைப்படம் தந்து 
வரைய வேண்டினேன் !
ஒருவராலும் 
அவள் போல 
வரைய முடியவில்லை 
அவள் அவ்வளவு அழகு ! 
-------------------------------------

பிரபல சிற்பிகள் 
பலரிடம் 
அவளின் புகைப்படம் தந்து 
அவளை சிலையாக 
வடிக்க  வேண்டினேன் !
ஒருவராலும் 
அவள் போல சிலை
வடிக்க  முடியவில்லை 
அவள் அவ்வளவு அழகு ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்