கவிஞர் நெல்லை ச .சுப்பையா அவர்களின் மணி விழா வாழ்த்து மடல் ! கவிஞர் இரா .இரவி !

கவிஞர் நெல்லை ச .சுப்பையா அவர்களின் 

மணி விழா வாழ்த்து மடல் ! கவிஞர் இரா .இரவி !

மகாகவி பாரதியாரின் இயற்பெயரான சுப்பையாவை !
இயல்பாகவே இயற்பெயராகப் பெற்றிட்ட இனிய கவியே !

தமிழ்க்கடல் சுப்பையா அவர்களின் பெயர்சொல்லும் பேரனே !
தொழிற்
ங்கத்தலைவர் தங்கமான சங்கரனின் தவப்புதல்வனே !

தியாகத்தின் திருஉருவம் சங்கரவடிவு அம்மாளின் பாசமகனே !
தமிழுக்குச் சங்கம் அமைத்த மதுரையில் கவிபாடிச் சிறந்தவனே !

நல்லகவி பாரதிக்கு அன்று உற்றதுணை செல்லம்மா !
நெல்லைக்கவி சுப்பையாவிற்கு உற்றதுணை லட்சுமி தேவி !

பொறியாளர் சங்கரியின் பாசமிக்க தந்தையே !
பொறியாளர் இராமகிருஷ்ணனின் பாசமிக்க மாமனாரே !

கவிதைஉறவு மேடைகளில் கவியரங்கத் தலைமை ஏற்று
கவிதை முழக்கம் செய்திட்ட கவிச் சிங்கமே !

மடை உடை வெள்ளமென கவிதை கொட்டும் !
மட்டற்ற கவிஞரே ! கவிதைக் குற்ற்லாமே !

பிறந்த ஊராம் நெல்லைக்குப்  பெரும்புகழ் சேர்த்தவரே !
பாய்ந்துவரும் தாமிரபரணியாய் கவிதை வடிப்பவரே !

ஏழு நூல்களை எழுதிட்ட கவியருவியே !
எட்டாத உயரம் கவிதையால் தொட்டவரே !

கள்ளம் கபடமில்லா
க் குழந்தை உள்ளம் கொண்டவரே !
கற்கண்டுக் கவிதை வடிக்கும் கவிதை மன்னவரே !

ஏர்வாடியாரின் அன்பிற்கு என்றும் பாத்திரமானவரே !
ஏர்வாடியாரின் இதயத்தில் என்றும் இருப்பவரே !

ஒருபோதும் உழைக்கச் சளைக்காத உள்ளம் பெற்றவரே !
ஓய்வில்லா உழைப்பால் உதவி மேலாளராக உயர்ந்தவரே !

பாரத மாநில வங்கியின் பெருமைகளில் ஒன்றானவரே !
பண்பில் சிறந்தவரே ! பாசத்தால் உயர்ந்தவரே !

மணிவிழா
க்  காணும் மணியான மாமனிதரே !
மாசில்லாப் பொன்னே !வாழிய நீ பல்லாண்டு !


.

கருத்துகள்