வேண்டாம் கொடிய குளிர்பானம் !கவிஞர் இரா .இரவி !

வேண்டாம் கொடிய குளிர்பானம் !கவிஞர் இரா .இரவி !
 


பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால் 
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !

பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில் 
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !

புழுக்களுக்கான  மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !

குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில் 
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !

பத்தே நாட்களில் கரைந்து விடும் 
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !


ஆராய்ச்சி செய்து  அறிவியலாளர்கள் 
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !

வெளிநாடுகளில்  தடை செய்யப்பட்ட 
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !

ஆதாயத்திற்காக ஆளும்  அரசியல்வாதிகள் 
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !

குழந்தைகளும் அறியாமல் கொடிய 
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !

படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப் 
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !

சொந்தப் பணத்தில் விலை தந்து 
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?

உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு 
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு! 

குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !  
.

கருத்துகள்