ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ   ( சென்றியு  )  கவிஞர் இரா .இரவி !

மிருகத்தையும் 
மனிதனாக்கியது 
மழலையின் சிரிப்பு !

களத்துமேட்டில் குவித்த நெல் 
குறையவில்லை அப்படியே 
கிராமங்களில் !

தேவைப்பட்டது பணம் 
நடத்தினார் 
காதணி விழா !

ஒய்வுக்குமுன் 
மகள் திருமணம் 
அரசு ஊழியர் !

விமானம் ஓட்டினாலும் 
வீட்டில் சமையல் 
பெண்கள் !

சோழியன் குடுமி 
சும்மா ஆடியது 
காற்று !

வைகுண்டத்திற்கு வழி  சொன்னவர் 
மறந்தார் 
தன் வீட்டிற்கு வழி !

இன்றும் தொடர்கின்றது 
மன்னனின் சந்தேகம் 
கூந்தலின் மணம் இயற்கையா ?

மரம் இழந்த இலை 
சருகானது 
பெற்றோர் இழந்த குழந்தை ?

ஒன்றும் ஒன்றும் இரண்டு 
குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று 
பிரிவினை பெரிய வினை !

வயதைக் குறைக்கும் 
வாழ்நாளை நீடிக்கும் 
இலக்கிய ஈடுபாடு !

அளவிற்கு மிஞ்சினால் 
அமுதமும் திகட்டும் 
திகட்டாத தமிழ் !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்