மரப்பாச்சி ! கவிஞர் இரா .இரவி

மரப்பாச்சி !  கவிஞர் இரா .இரவி

.

தரணிக்கு உணர்த்தியது 
தச்சனின்  திறமையை 
மரப்பாச்சி !  

பெரியவர்களுக்கும் பயன்பட்டது 
விற்றுப் பிழைக்க 
மரப்பாச்சி !  

வெட்டியதற்கு வருந்தாமல் 
மகிழ்ந்தது மரம் 
மரப்பாச்சி !  

பெண் இனத்தின் 
பிரதிநிதியாக 
மரப்பாச்சி !  

உடையவே இல்லை
பலமுறை விழுந்தும் 
மரப்பாச்சி !  

உண்ணாவிட்டாலும்  சோறு 
ஊட்டி மகிழ்ந்தது குழந்தை 
மரப்பாச்சி !  

பொம்மை அல்ல 
உயிர்த்தோழி குழந்தைக்கு 
மரப்பாச்சி !  

அம்மணம் பிடிக்காமல் 
ஆடை அணிவித்தது குழந்தை 
மரப்பாச்சி !  

பேசாவிட்டாலும் பேசி 
மகிழ்ந்தது குழந்தை 
மரப்பாச்சி !  

கோபம் வந்தால் 
ஆயுதமானது குழந்தைக்கு 
மரப்பாச்சி !  

தாயுக்கு  உதவியது 
குழந்தைக்கு சோறு  ஊட்ட
 மரப்பாச்சி !  

உரசிப் போட 
நீக்கியது தலைவலி 
மரப்பாச்சி !  
 
உற்று  நோக்கினால் 
உயிருள்ளதாகத் தெரியும் 
மரப்பாச்சி !

அக்றிணை அல்ல 
உயர்திணை 
மரப்பாச்சி ! 



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்