மதுரை நகைச்சுவை மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் .

மதுரை நகைச்சுவை மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் .

மதுரை நகைச்சுவை மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் மீனாச்சி மிசின்
மருத்துவமனை 6 ஆவது தளத்தில் நடைபெற்றது .விழாவிற்கு  வருகை தந்தவர்களை
திரு .மாணிக்கம் ராஜ் வரவேற்றார் .மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (
ஒய்வு ) திரு பிச்சுமணி தலைமை வகித்தார் .தணிக்கைத்துறை கண்காணிப்பாளர் (
ஒய்வு ) திரு.சிவராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

     உதவி சுற்றுலா அலுவலர் , கவிஞர் இரா .இரவி சிறப்பு விருந்தினராகக்
கலந்துக் கொண்டு உரையாற்றி , நகைச்சுவை போட்டியில்
வெற்றிப்பெற்றவர்களுக்கு திரு .மாணிக்கம் ராஜ் தயாரித்த நகைச்சுவை
புத்தகங்களை பரிசாக வழங்கினார் . கரிசல்பட்டி திரு .சுந்தரராசன்
தொகுப்புரையாற்றினார்.கலைமாமணி கு .ஞானசம்பந்தன் செல்லிடப்பேசி வழியாக
வாழ்த்துரை வழங்கினார்

நகைச்சுவை மன்றத்திற்கு தொடர்ந்து அதரவு நல்கி வரும் மீனாட்சி மிசின்
மருத்துமனை நிர்வாக இயக்குனர் , மக்கள் மருத்துவர் திரு .சேதுராமன்
அவர்களுக்கும்  ,
கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களுக்கும் திரு சுப்பிரமணி நன்றி கூறினார்
விழாவிற்கான ஏற்பாட்டை நகைச்சுவை மன்றத்தின்  தகவல் தொடர்பாளர் திரு
.சங்கையா செய்து இருந்தார் .

கருத்துகள்