இயற்கை ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி !

இயற்கை  ஹைக்கூ . கவிஞர் இரா .இரவி !

நடந்தேன் நடந்தது
நின்றேன் நின்றது
நிலவு !

உழைக்காமலே வியர்வை
மலர்களின் மீது
பனித்துளி !

பூமியில் இருந்து வானம்
வானில் இருந்து பூமி
மழையின் சுற்றுலா !

ஓய்வு அறியாதவன்
சோம்பல் முறிக்காதவன்
ஆதவன் !

கண்டதும் மலர்ந்தன
சென்றதும் வாடின
மலர்கள் !

மணக்கும்
தொட்ட கை
மதுரை மல்லிகை !

முற்றிலும் உண்மை
மலர்களின் ராஜா
ரோஜா !

வெட்ட வெட்ட
பொய்த்து  மழை
மரம் !

ஒன்று இசைக்கு
மற்றொன்று பாடைக்கு
மூங்கில் !

ஒன்று சிலை
மற்றொன்று படிக்கல்
மலைக்கல் !

கழிவு நீர் குடித்து
இளநீர் தந்தது
தென்னை !


கருத்துகள்