இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி


இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி 

கல்நெஞ்சம் படைத்த கர்னாடகம் 
காவிரியை சிறைப் பிடித்த காரணத்தால் 

உச்சநீதி மன்ற தீர்ப்புகளையே 
துச்சமென நினைத்து மதிக்க வில்லை !

நஞ்சை புஞ்சை எதுவும் விளையவில்லை 
நெஞ்சம் கனத்து வேதனையில் விவசாயிகள் !

முப்போகம் விளைந்திட்ட பூமியில் இன்று 
ஒரு போகம்  கூ விளைவிக்க முடியவில்லை !

உலகிற்கே உணவு தந்த ஒப்பற்ற  உழவன் 
உணவுக்காக இழப்பிடு கேட்க்கும் அவலம் !

காவிரியும் வரவில்லை மாமழையும்  பொழியவில்லை !
கண்ணீர்தான் வந்தது கஷ்டம்தான் வந்தது !

அறுவடைத் திருநாளில் அறுவடை இல்லை !
பொங்கல் திருநாளில் பொங்கிட வில்லை !

நெல்லுக்கும் வழியில்லை கரும்புக்கும்வழியில்லை !
நெருக்கடியில் விவசாயி நிம்மதியின்றி குடும்பங்கள் !

இன்பமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை !
இன்னலே மிச்சம் துன்பமே எச்சம் !

பொங்கல் வாழ்த்து சொல்ல மனமில்லை 
பொங்க வில்லை  விவசாயிகளின் வாழ்க்கை !

இனிக்கவில்லை பொங்கல் கசந்தது தமிழருக்கு !
இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள் !

-- 

கருத்துகள்