புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.

புத்தாண்டு வாழ்த்துக்கள் !      கவிஞர் இரா .இரவி.

வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும்
!
வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !

இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !
இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் !

வஞ்சியருக்கு ஏற்றம் தரும்
ஆண்டாகட்டும் !
வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !

முதியோருக்கு இன்பம் தரும் ஆண்டாகட்டும் !
மூத்தோருக்கு மதிப்புத் தரும் ஆண்டாகட்டும் !

சாதி மத சண்டைகள் இல்லாத ஆண்டாகட்டும் !
சகோதர உணர்வுப் பெருகும் ஆண்டாகட்டும்
!

படைப்பாளிகளுக்குப் புகழ் மிக்க ஆண்டாகட்டும் !
பண்பாளர்களைப் போற்றும்
ஆண்டாகட்டும் !
ழல் எங்கும் எதிலும்  இல்லாத ஆண்டாகட்டும் !ழல்வாதிகள் மனம் திருந்தும் ஆண்டாகட்டும் !

அரசியல்வாதிகள் திருந்தி வாழும்  ஆண்டாகட்டும் !
அரசியலில் தூய்மை வாய்மை நிலவும்
ஆண்டாகட்டும் !

அறவழி நடப்போருக்கு நன்மை கிட்டும் ஆண்டாகட்டும் !
தீயோ
ருக்குத் திருந்தும் வாய்ப்பு கிட்டும் ஆண்டாகட்டும் !

வன்முறை இன்றிஅமைதி நிலவும் ஆண்டாகட்டும் !
நன்முறையில் மக்கள்  நடக்கும்
ஆண்டாகட்டும் !
மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியும் ஆண்டாகட்டும் !
மூளையை பகு
த்தறிவிற்குப் பயன்படுத்தும் ஆண்டாகட்டும்

மனிதநேயம் எங்கும் மலரும் ஆண்டாகட்டும் !
மதவெறி எங்கும் அழியும்
ஆண்டாகட்டும் !
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை
ஆண்டாகட்டும் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்
ஆண்டாகட்டும் !
மனிதனை மனிதன்  மதித்து நடக்கும்  ஆண்டாகட்டும் !
மனதர்கள் யாவரும் மகிழ்ந்து இருக்கும்
ஆண்டாகட்டும் !

நல்லதை மட்டும் கேட்கும் பார்க்கும் படிக்கும் ஆண்டாகட்டும் !
தீயவை எங்கும் எதிலும் நிகழாத நல்ல
ஆண்டாகட்டும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் !

கருத்துகள்