பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! பிடிவாதம் !

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! பிடிவாதம் !
பிடிவாதம் !   கவிஞர் இரா .இரவி .
வாதம் செய்வது திறமை !
பிடிவாதம் செய்வது மடமை !
------------------------------------------------------
கை கால்களை
முடக்கும் வாதம் !
மூளையை முடக்கும் 
பிடிவாதம் !
------------------------------------------------------
வாதத்தை விட கொடிய நோய்

வேண்டாம்  பிடிவாதம் !
-----------------------------------------------------
பெரிய மனிதர்களின்
வீழ்ச்சிக்கு காரணம்
 
பிடிவாதம் !
---------------------------------------------------------
விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை சிறக்கும் !
பிடிவாதம் ! வாழ்வை அழிக்கும் !
-------------------------------------------------------------
 

கருத்துகள்

  1. தஙகளது பதிவுகளை எனக்கு எனது இ.மெயிலுக்குத் தர இயலுமா?
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்
    snrmani@rediffmail.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக