வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு விடுதலை !
பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !
நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த
நயவஞ்சகனோடு இணக்கம் இனி சாத்தியமில்லை !
மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா இருந்தால் கூட மன்னிக்க மாட்டார் !
கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில் இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை !
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகள் !
நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிந்தவனை
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?
வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க முடியுமா ?
மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல்
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ?
தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !
கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !
இனவெறி பிடித்த சிங்களப்படை மிருகங்களோடு
இணைந்து வாழ்வது இனி இயலவே இயலாது !
இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி
இலங்கை இரண்டாகாது என்கின்றனர் !
அய் .நா. மன்றமே மவுனம் போதும் !
அநியாயம் புரிந்தவனுக்கு தண்டனை கொடு !
தெற்கு சூடான் உதயமானது தனி நாடாக !
தமிழ் ஈழமும் உதயமாகட்டும் தனி நாடாக !
ஈழக்கொடி பறக்க வேண்டும் அய் .நா. மன்றத்தில்
ஈழத்தூதுவர் அலுவலகம் திறக்க வேண்டும் இந்தியாவில் !
இலங்கையை உடன் இரண்டாக்கு ஈழத் தமிழர்களை ஒன்றாக்கு !
இனியும் சிங்களரோடு ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை !
சிங்களரும் தமிழரும் இனி இணைந்து வாழவே முடியாது !
சிந்தித்துப் பார்த்து பிரித்து வைப்பதே இருவருக்கும் நன்மை
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லுவது வெட்டிப்பேச்சு
ஒருபோதும் இனி ஒத்துவராது உணருங்கள் !
ஈழத்தில் குடி புகுந்த சிங்களரை வெளியேற்றுங்கள்
ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களை குடி அமர்த்துங்கள் !
இரண்டுபட்ட இலங்கை என்று ஆக்குவதே
இரண்டு இனத்திற்கும் பாதுகாப்பு அறிந்திடுங்கள் !
ஈழம் ஈழத் தமிழருக்கு உடன் கிடைத்தாக வேண்டும்
ஈழத்தில் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் !
உலகத் தமிழர்களே உரக்கக் குரல் கொடுங்கள்
உதயமாகட்டும் ஈழத்தில் தமிழரின் தனி நாடு !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு விடுதலை !
பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !
நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த
நயவஞ்சகனோடு இணக்கம் இனி சாத்தியமில்லை !
மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா இருந்தால் கூட மன்னிக்க மாட்டார் !
கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில் இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை !
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகள் !
நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிந்தவனை
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?
வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க முடியுமா ?
மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல்
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ?
தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !
கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !
இனவெறி பிடித்த சிங்களப்படை மிருகங்களோடு
இணைந்து வாழ்வது இனி இயலவே இயலாது !
இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி
இலங்கை இரண்டாகாது என்கின்றனர் !
அய் .நா. மன்றமே மவுனம் போதும் !
அநியாயம் புரிந்தவனுக்கு தண்டனை கொடு !
தெற்கு சூடான் உதயமானது தனி நாடாக !
தமிழ் ஈழமும் உதயமாகட்டும் தனி நாடாக !
ஈழக்கொடி பறக்க வேண்டும் அய் .நா. மன்றத்தில்
ஈழத்தூதுவர் அலுவலகம் திறக்க வேண்டும் இந்தியாவில் !
இலங்கையை உடன் இரண்டாக்கு ஈழத் தமிழர்களை ஒன்றாக்கு !
இனியும் சிங்களரோடு ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை !
சிங்களரும் தமிழரும் இனி இணைந்து வாழவே முடியாது !
சிந்தித்துப் பார்த்து பிரித்து வைப்பதே இருவருக்கும் நன்மை
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லுவது வெட்டிப்பேச்சு
ஒருபோதும் இனி ஒத்துவராது உணருங்கள் !
ஈழத்தில் குடி புகுந்த சிங்களரை வெளியேற்றுங்கள்
ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களை குடி அமர்த்துங்கள் !
இரண்டுபட்ட இலங்கை என்று ஆக்குவதே
இரண்டு இனத்திற்கும் பாதுகாப்பு அறிந்திடுங்கள் !
ஈழம் ஈழத் தமிழருக்கு உடன் கிடைத்தாக வேண்டும்
ஈழத்தில் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் !
உலகத் தமிழர்களே உரக்கக் குரல் கொடுங்கள்
உதயமாகட்டும் ஈழத்தில் தமிழரின் தனி நாடு !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.
http://en.netlog.com/
http://www.noolulagam.com/
கருத்துகள்
கருத்துரையிடுக