ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                          கவிஞர் இரா .இரவி
மின் விளக்கின்
வெளிச்சத்தில்
எடிசன் முகம் !
இறந்தபின்னும்
ஒலி எழுப்பும் விலங்கு
மத்தளம் !

திட்டங்கள் கோடிகளில்
ஏழைகள் தெருக்  கோடியில்  
என்று விடியல் ?

பாலியல்  குற்றவாளி
கொலைக்
குற்றவாளி
சாமியார்கள் ?

தாமதமான நீதி அநீதி
தண்டியுங்கள் விரைவில்
இலங்கைக் கொடூரன் !


சரியாக ஆடும்
ஆட்டத்தின் பெயரோ
தப்பாட்டம் !

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இசை !

மனதை மலர்விக்கும்
சிந்தையைச் செதுக்கும்
கவிதை !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்