படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

*தோழர் ப. ஜீவானந்தம் பிறந்தநாளில்..,* ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சு வரை போராடியவர். மகத்தான பொதுவுடமைத் தலைவர் தோழர் ஜீவா அவர்களின் கொள்கைகள் மற்றும் மேன்மையை, இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. அதில் நாம் தவறிவிட்டோம். ஜீவாவின் சிந்தனைகள் இளைஞர்கள் மனதில் விதைக்க படவில்லை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல், அவரை கொள்கை அளவில் எதிர்த்த சமூக சொற்பொழிவாளர். கம்யூனிச பெருமை இப்போது சமரசம் செய்து கொண்டு கொள்கையை கூறுபோட்டு கொண்டிருக்கிறது. ஜீவா தமிழக பொது அரசியலின் உன்னதம். சுயநலமில்லாத பொது நல தியாகிகள் வாழ்ந்த புண்ணிய தமிழகம், சுயநலவாதிகளின் கூடாரமாகி கொண்டிருக்கிறது. பாரதிக்கு, தாசனாக தன்னை சமர்ப்பணம் செய்த பாரதிதாசனும், பெரியார் தன் திருமணத்தின் போது, முடிவெடுப்பதில் குழப்ப நிலையில் இருந்தபோது ஆலோசனை வழங்கிய ராஜாஜியும், மிக நெருக்கமான உறவு இல்லையென்றாலும் அம்பேத்காரை, மிக மரியாதையுடன் நடத்திய காந்தியும், தான் இறக்கும் தருவாயிலும் காமராஜரை நினைவு கூர்ந்த ஜீவானந்தமும். மேன் மக்கள் மேன் மக்களே என்பதை நமக்கு உணர்த்தியவர்கள். அவர்கள் கொண்ட கருத்தியல்கள் பொருட்டே ஒருவர் மீது மற்றொருவர் பகைமை பாராட்டினர். இருப்பினும் அவர்களுடைய Friendship and mutual respect are separate from personal ideologies. தற்போது இதுபோன்ற ஒரு வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட தனித்தன்மை கொண்ட ஆளுமைகளை ஒரு ஒப்புமைக்காக தேடுகையில் ஒருவரும் இல்லை என்பதே நடைமுறை.., பி கு:- திருச்சியில் நான் பிறந்து வளர்ந்த தெருவின் பெயர் ஜீவானந்தம் தெரு. நினைவில் என்றும் நிலைத்திருக்கிற பெயர். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்