படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி
☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️
*🔥மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை🔥*
ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.
1. சாப்பிடும் முன் மற்றவர்களின் பசியை உணர்ந்த தலைமுறை.
2. நெருக்கடியான வீடுகளில் மிகுந்த அன்புடன் வாழ்ந்த தலைமுறை.
3. பொறுப்புகளை அறிந்த தலைமுறை. 'நான்' என்று சொல்லாமல் 'நாம்' என்று வாழ்ந்த தலைமுறை.
4. பட்டங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையைப் படித்த தலைமுறை.
5. கடிகாரம் இல்லாவிட்டாலும், நேரத்தை சரியாக பயன்படுத்திய தலைமுறை.
6. இன்டர்நெட் பார்க்காமல் அறிவை நிரப்பிக்கொண்ட தலைமுறை.
7. கால்குலேட்டர் இல்லாவிட்டாலும் கணக்கு செய்ய முடிந்த தலைமுறை.
8. மொபைல் போன்கள் இல்லாவிட்டாலும் நட்பு உரையாடல்களுக்கு குறைவில்லாத தலைமுறை.
9. TV இல்லாவிட்டாலும் வேடிக்கையாக நேரத்தை கழித்த தலைமுறை.
10. GPS இல்லாவிட்டாலும் இலக்கை துல்லியமாக அடைய முடிந்த தலைமுறை.
11. தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும் சுக சந்தோஷங்களுடன் வாழ்ந்த தலைமுறை.
12. AC, கூலர் இல்லாவிட்டாலும் திறந்தவெளியில் சுகமாக உறங்கிய தலைமுறை.
13. மினரல் வாட்டருக்கு பதில் குளம்/கிணற்று நீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.
14. பீட்சா, பர்கர் இல்லாமல் பஞ்சு மிட்டாய், பொரி சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
15. இரவுகளில் வீட்டு திண்ணையில் சுகமாக கதை பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
16. ஆறு வயது வரை குழந்தைகளின் பால்யத்தை விளையாட்டு பாட்டுகளால் நிரப்பிய தலைமுறை.
17. அதன் பிறகு ஒரு பைசா கட்டணம் இல்லாத அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் குழந்தைகளை படிக்க வைத்து - அங்கே தமிழிலும், இங்கே ஆங்கிலத்திலும் புலவர்களாக ஆகும்படி குழந்தைகளை உருவாக்கிய தலைமுறை.
18. கிலோமீட்டர் தூரத்தையும் சுலபமாக நடக்க முடிந்த தலைமுறை.
19. ஒழுக்கம் தவறிய பிள்ளைக்கு பள்ளியில் ஆசிரியர் நாலு அடி கொடுத்தால் - அவனுக்கு வீட்டில் இன்னும் பத்து அடி கொடுத்த தலைமுறை.
20. தெருக்கூத்து, தோல் பொம்மலாட்டம், புராண கதைகளை ரசித்த தலைமுறை.
21. சென்சார் தேவையில்லாத கருத்துள்ள கருப்பு-வெள்ளை படங்கள் பார்த்த தலைமுறை.
22. வீட்டு வாசலை கோலங்களால் அலங்கரித்த தலைமுறை.
23. வேலையாட்கள், யோகா, ஜிம் இல்லாமல், மூட்டை மூட்டையாக வேலை செய்து, வியர்வை சிந்தி நூறு வயது வாழ்ந்த தலைமுறை.
24. உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு மதிப்பளித்த தலைமுறை.
25. சொத்துகளை விட, பாசத்திற்கும், பந்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த தலைமுறை.
26. கூட்டுக் குடும்பங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
27. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்ற தலைமுறை.
28. வியாபாரத்தில் கலப்படத்திற்கு இடம் கொடுக்காத தலைமுறை.
29. மற்றவர்களின் நன்மையை விரும்பிய தலைமுறை.
30. நீதி நேர்மையுடன் ஏமாற்றாமல் வாழ்ந்த தலைமுறை.
31. கல்லை சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடிந்த தலைமுறை.
32. கார்ப்பரேட் மருத்துவமனைகள் இல்லாமலும் ஆரோக்கியமாக வாழ்ந்த தலைமுறை.
33. ஹார்ட் அட்டாக், கேன்சர் பற்றி தெரியாத தலைமுறை.
34. BP, சுகர் வரவிடாத தலைமுறை.
35. லாந்தர் விளக்குகளால் வாழ்க்கையில் ஒளி நிரப்பிய தலைமுறை.
36. கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்ட தலைமுறை.
37. எவ்வளவு இருந்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்ற பேராசை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த தலைமுறை.
38. ஆடம்பரங்களுக்கு தூரமாக இருந்த தலைமுறை. போஸ்ட் கார்டுகளில் உரையாடல் நடத்திய தலைமுறை.
39. தியாகங்களால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்த தலைமுறை. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்த தலைமுறை.
40. காபி, டிபன் இல்லாமல் பழைய சோறு சாப்பிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறை.....
அப்படிப்பட்ட தலைமுறையில் உள்ள அரிய மனிதர்கள் இன்று ஒவ்வொருவராக நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை இழக்கும் போது எல்லாவற்றையும் இழப்பது போல் தோன்றுகிறது.
_போய்க்கொண்டிருக்கும் அந்த தலைமுறையிடம் இருந்து இந்த தலைமுறை எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் - எதிர்காலம் இருள் மயமே!_
அந்த தலைமுறை உண்மையில் நம் கலாச்சாரம், நம் மதிப்புகளின் பிரதிபலிப்பு. அவர்களைப் போன்ற மனங்கள் மீண்டும் வராது... அவர்களை இழப்பது என்பது நம் வேர்களை இழப்பதே....
அந்த தலைமுறை காட்டிய மதிப்புகள், அன்பு, நேர்மை இந்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்...
தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறோம் ஆனால் மதிப்புகளில் பின்னோக்கி செல்கிறோம்… அந்த தலைமுறை நமக்கு மனிதநேயம் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தது...
லாந்தர் ஒளியில் வெளிச்சம் நிரப்பியது அந்த தலைமுறை – கரண்ட் விளக்கு ஒளியில் இருளை வளர்த்துக்கொள்கிறது இந்த தலைமுறை.
*"அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது இயற்கையுடன் சகவாழ்வு. நாம் கற்றுக்கொள்வது இயந்திர வாழ்க்கை."*
*சரியா? தவறா?*
ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.??

கருத்துகள்
கருத்துரையிடுக