படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*மருதப் பாவரங்கம்* 4-7-2026 சிறப்புத் தலைப்பு *வா.மு. சேதுராமனார்* (பஃறொடை வெண்பா) தமிழாசான் நற்பணியைத் தாம்செய்து அந்நாள் தமிழ்வளர்த்த நல்லறிஞர் தாம்சேது ராமனாம்; ஏற்றமுடன் செய்தார் இனிய கவிதைகள் போற்றலுடன் பல்லோர் புகழ மரபினில்; அந்நாள் தமிழ்ப்பணி யாம்இதழைத் தாம்நடத்திக் கண்முன்னே பல்லோர் கவிதை எழுதவைத்தார்; வல்லார் திருவள்ளு வர்கலை மாமணி நல்விருது கள்தம்மை நானிலத்தில் பெற்றார்; தமிழ்வாழும் காலமெல்லாம் தம்புகழ் பேசத் தமிழ்வளர்த்தார் என்றல் தகவு! *--இராம. பரஞ்சோதி*

கருத்துகள்