படித்ததில் பிடித்தது*
ஹைக்கூ திலகம் அய்யா
கவிஞர் இரா.இரவி அவர்களின் நட்பு கிடைக்கப்பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.
அவர்தம் எழுதிய படைப்புகளில் ஒன்றான
*இளமை இனிமை புதுமை*
கவிசோலை படித்தேன்.
ஐம்பத்தாறு தலைப்புகளில் இன்பத்தேனை இட்டு வாசகர்களுக்கு கவி-விருந்து வைத்திருக்கிறார்.
அதிலும்,
*உண்மை காதல் ஒரு வழிப் பாதை*
*யுத்தம் செய்யும் கண்கள்* சிறப்பு விருந்து.
மற்றும்
*தனிமையோடு பேசுங்கள்*
இன்றைய தலைமுறையினர் அவசியம் வாசிக்கவும் பின்பற்றவும் வேண்டிய வரிகள்.
எனை ஈர்த்த இருவரிகள்:
புவிஈர்ப்பு விசை எல்லோருக்கும் பொது,
பாவையின் விழி ஈர்ப்பு விசை எனக்கு மட்டும்.
விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்: விழிகளில் மின்சாரம்...!

கருத்துகள்
கருத்துரையிடுக