ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மனிதனுக்கு
அழகு
மனிதநேயம் !
திருந்தாத மக்கள்
தெரிந்தே ஏமாறுகின்றனர்
தனியார் நிதிநிறுவனம்
வேண்டாம் ஏளனம
மானம் காத்தது
மாற்றுத்திறனாளி !
இறந்த பின்னும்
வாழும் விழிகள்
விழி தானம்
இடுகாடு வேண்டாம்
சுடுகாடு போதும்
இடநெருக்கடி!
ழியனுப்ப வந்தவர்
உடன் பயணித்தார்
புறப்பட்டது தொடரி !
அமைதி காக்கவும்
கத்திச் சொன்னார்
ஆசிரியர் !
மனிதர்களை மட்டுமல்ல
கணினிகளை தாக்குகின்றன
கிருமிகள் !
மல்லிகைக்கு மட்டுமல்ல
மாசற்ற அன்பிற்கும்
மதுரை !
பெயரிலேயே
திரு உடையவர்
திருவள்ளுவர் !
பெயரிலேயே
திரு உடையது
திருக்குறள் !
ஓரடி ஆத்திசூடி
ஈரடி திருக்குறள்
மூவடி ஹைக்கூ !
படித்தவர்களும்
ரேகை பதித்தனர்
அலுவலகம் நுழைகையில்
குறைத்தது
வாழ்நாள்
நவீன உணவு !
உட்கார்ந்த இடத்தில்
ஓடாமல் விளையாடியது
கணினியில் குழந்தை !
வயப்பட்டவர்கள் மட்டும்
உணரும் உன்னதசுகம்
காதல்
!பூச்சென்டாக ஒன்று
மலர்வளையமாக மற்றொன்று
ஒரு செடிப் பூக்கள் !
கடன் வாங்கக்
கற்றுத் தருகிறார்
கணக்கு ஆசிரியர் !
ஆட்டம் ஆர்ப்பாட்டம்
அனைத்தும் அடக்கம்
கல்லறை !
தூண்டில் புழு மீன்
மனிதன் புழு
வாழ்க்கை ஒரு வட்டம்
நவீனகாலம்
மாணவனைக் கண்டு
அச்சத்தில் ஆசிரியர் !
மழை விட்ட பின்னும்
சாரல்
மரத்திலிருந்து !
தோல்வி
வெற்றிக்கான படிக்கட்டு சரி
படிக்கட்டு எத்தனை
?மூச்சு இருக்குவரை
நினைவில் இருக்கும்
முதல் காதல் !
தாமதமானாலும்
இறுதியில் வெல்வது
அறம் !
பணம் பத்தும் செய்யும்
உணர்த்தியது
தேர்தல் !
இந்நாட்டு மன்னர்கள்
தேர்தல் மறுநாள்
சாதாரண குடிமக்கள் !
தண்டனை என்றுஅறிவிப்போம்
தமிங்கிலம்
பேசினால் !
தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி
பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று
பிதற்றுகின்றனர் கோமாளிகள் !
ஒழுக்கம் உணர்த்தும்
ஒப்பற்ற வரலாறு
சிலப்பதிகாரம் !
ஒரே வரியில்
ஒப்பற்ற அறம்
ஆத்திசூடி !
அறிந்தது உலகம்
அறியவில்லை தமிழர்
திருக்குறள் அருமை !

கருத்துகள்
கருத்துரையிடுக