*என்மனம் கவர்ந்த அம்பேத்கர்*
(பா வகை_*வழிநடைச்சிந்து*)
அக்கிரமம் அத்தனையும் அழித்திடவே__*அம்பேத்கர்*
அவனியில் பிறந்தாரே!
அறிவால் உயர்ந்தாரே!
எக்காளம் போட்ட ஏற்றத்தாழ்வை__*அம்பேத்கர்*
இல்லாமல் செய்தாரே!
இருட்டெல்லாம் ஒழித்தாரே!
(1)
தீண்டாமை என்ற திரைதனை__*அம்பேத்கர்*
தீய்த்திட முனைந்தாரே!
தீர்மானம் செய்தாரே!
ஆண்டாண்டுக் கால
அநியாயம்__*அம்பேத்கர்*
அத்தனையும் எரித்தாரே!
அருளொளியாய்த் திகழ்ந்தாரே!
(2)
எல்லோரும் ஓரினம் என்றேதான்__*அம்பேத்கர்*
எவ்விடமும் முழங்கினாரே!
ஏறு போல் ஓங்கினாரே!
கல்வியொன்றே முன்னேற்றும் கருவியென__*அம்பேத்கர்*
கற்கச் சொன்னாரே!
கற்றூணாய்த் தாங்கினாரே!
(3)
சாதிமதப் பேதத்தைச் சாய்த்திடவே__*அம்பேத்கர்*
சமத்துவம் மலர்த்தினாரே!
சட்டங்கள் படைத்தாரே!
கோதிலாத அன்பேதான் கோவிலென்றே__*அம்பேத்கர்*
அழகாய்ச் சொன்னாரே!
அறிவால் ஒளிர்ந்தாரே!
(4)
த.ஹேமாவதி
கோளூர்

கருத்துகள்
கருத்துரையிடுக