பெருங்கவிக்கோவை என்று காண்பம் இனி!
***************************************************
1.
தன்பணி என்றும் தமிழ்ப்பணி என்றுமே
இன்புற்று வா.மு.சே ஞாலத்தில்
--- தன்கடனாய்
நன்றெண்ணிச் செய்தாரை நற்றமிழர்
எல்லாரும்
என்றுநாம் காண்பம் இனி !
2.
மொழியினம் நாடுமே முன்னேற
எண்ணி
விழிப்போ டுழைத்த கவிக்கோ
---விழிமூடித்
தன்மூச்சும் அற்ற தமிழ்தாய் மகனையே
என்றுநாம் காண்பம் இனி !
3.
நோபல் பரிசுபெற நோன்புமே
நோற்றாரை
நோபல் பரிசு பெறுமுன்னே
கூற்றுவனால்
மன்னு பெருங்கவிக்கோ மூச்சடங்கிப்
போனாரை
என்றுநாம் காண்பம் இனி !
4.
பன்னாட்டில் வாழுகிற பைந்தமிழர்
தம்மையே
நன்றே உறவாக்க நாட்டமுடன் --என்றுமே
அன்போ டுழைத்த பெருங்கவிக்கோ
என்பாரை
என்றுநாம் காண்பம் இனி !
5.
அன்னைத் தமிழை அகம்வைத்து
ஞாலத்தில்
முன்னிப் பணிசெய் பெருங்கவிக்கோ
---தன்னுருவம்
நன்னயம் இல்லாத கூற்றால் இழந்தாரை
என்றுநாம் காண்பம் இனி !
புலவர் பழ.தமிழாளன்,
இயக்குநர்---பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி.

கருத்துகள்
கருத்துரையிடுக