படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பெண்களைப் பற்றி வில்லியம் கோல்டிங் என்னும் ஆங்கில நாவலாசிரியர் சொல்லுவது இதுதான் :- பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன்... பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள். ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்…. உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்…. ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள். நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள். உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள். நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்…. எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்…

கருத்துகள்