உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளை உழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும் உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த உழைப்பால் ! பாலங்கள் கட்டியதும் அணைகள் கட்டியதும் வாகனங்கள் செய்ததும் சாலைகள் போட்டதும் உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் உழைப்பு மதிக்கப் பட வேண்டும் ! உண்ண உணவு வழங்கியவர்கள் உழைப்பாளிகள் ! உடுக்க உடை உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள் ! வசிக்க வீடு கட்டியவர்கள் உழைப்பாளிகள் ! வளமான வாழ்விற்குக் காரணம் உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் இல்லை என்றால் நீயும் இல்லை நானும் இல்லை உழைப்பாளிகள் இல்லை என்றால் ஊரும் இல்லை உறவும் இல்லை ! உழைப்பாளிகள் இல்லை என்றால் உலகம் இல்லை உழைப்பாளிகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை ! உடலின் வியர்வை நிலத்தில் சிந்தி உலகின் உயர்வை உருவாக்கிய சிற்பிகள் ! ஓய்வை ஒத்தி வைத்து விட்டு நாளும் உழைப்பை ஓய்வின்றி நல்கியவர்கள் ! உழைப்பாளிகள் வாழ்க்கையில் உயரவில்லை உழைக்காதவன் வாழ்க்கையில் உயர்ந்து விடுகின்றான் ! உடல் உழைப்பு மட்டம் என்பது மடமை மூளை உழைப்பு மட்டுமே உயர்வு என்பதும் மடமை ! உழைப்பாளிகள் உள்ளம் மகிழ்ந்து இருக்க வேண்டும் உள்ளதை உழைப்பாளிகளுக்கு பகிர்ந்திட வேண்டும் ! உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும் உழைப்பினை உலகம் போற்றிட வேண்டும் ! ------------------------------------------- உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி ! தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி ! தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி ! தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும் உன்னத தினம் உழைப்பாளர் தினம் ! வியர்வையை மதிக்கும் விவேக்மான தினம் ! உழைப்பைப் போற்றும் ஒப்பற்ற தினம் ! ஆண்டு முழுவதும் தினங்கள் வந்தாலும் ஆண்டாண்டாக மதிக்கும் தினம் உழைப்பாளர் தினம் ! இவ்வுலகின் வளர்ச்சி உழைப்பாளியின் முயற்சி ! இப்பூவுலகின் மலர்ச்சி உழைப்பாளியின் முயற்சி ! உலகில் உழைப்பவன் மட்டுமே மனிதன் ! உலகில் உழைக்காதவன் மனிதன் அன்று ! உழைக்காமல் உண்பவன் திருடன் என்று அன்றே ! உரைத்தார் உயர்ந்த தேசப்பிதா காந்தியடிகள் ! மரத்திற்கு அழகு பூக்கள் பூப்பது ! மனிதனுக்கு அழகு உழைத்து வாழ்வது ! உலகில் மேன்மையானது உடல் உழைப்பு ! உலகில் மென்மையானது மூளை உழைப்பு ! உடையில் இருக்கும் ! உள்ளத்தில் இருக்காது கறை ! உடல் நிறம் கருப்பு உள்ளமோ வெள்ளை ! கள்ளம் கபடம் அறியாதவர்கள் உழைப்பாளிகள் ! கற்கா விட்டாலும் பண்பாளர்கள் உழைப்பாளிகள் ! பிறந்ததன் பயன் உழைப்பில் உள்ளது ! பிறந்தோம் இறந்தோம் என்பதில் என்ன உள்ளது ! உண்ண உணவு தந்தவன் உழைப்பாளி ! உடுக்க உடை தந்தவன் உழைப்பாளி ! வசிக்க வீடு தந்தவன் உழைப்பாளி ! ரசிக்க மலர் தந்தவன் உழைப்பாளி ! மண்ணை சிலையாக்கியவன் உழைப்பாளி ! பொன்னை சிலையாக்கியவன் உழைப்பாளி ! கல்லை சிலையாக்கியவன் உழைப்பாளி ! மரத்தை சிலையாக்கியவன் உழைப்பாளி ! வண்ணத்தை ஓவியம் ஆக்கியவன் உழைப்பாளி ! எண்ணத்தை விதையாக்கிவன் உழைப்பாளி ! உழைப்பாளி இன்றி உலகம் இல்லை ! உழைப்பாளி இன்றி உயர்வு இல்லை ! உழைப்பாளி இன்றி வாழ்க்கை இல்லை ! உழைப்பாளி இன்றி வசந்தம் இல்லை ! வெயில் மழை பாராது உழைப்பவன் ! வெந்தசோற்றைத் தின்று வாழ்பவன் ! தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு ! பூசாரியை விடச் சிறந்தவன் உழைப்பாளி ! வியர்வை காயும் முன் கூலியைக் கொடு ! வேதனை வராமல் உழைப்பாளியை காத்திடு ! வியாபாரியிடம் பேரம் பேசினால் தவறு அன்று ! உழைப்பாளியிடம் பேரம் பேசினால் தவறு ! போற்றுவோம் !. உழைப்பைப் போற்றுவோம் ! போற்றுவோம் ! உழைப்பாளிகளைப் போற்றுவோம் ! -- .

கருத்துகள்