கவிக்கிறுக்கன் தேவகோட்டை முத்துமணி, ஜகார்தாவி்ல் இருந்து…

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், மேடான் நகரில், அன்பு நண்பர் தமிழ்த்திரு சிவாஜி இராஜா அவர்களின் பெரு முயற்சியால் , பிரான்சு நாட்டில் இருந்து இயங்கி வரும் ‘தமிழ்ச் சிறகம்’ அமைப்பின் மூலமாக அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழனாய்த் தலை வணங்கி வாழ்த்தி மகிழ்வோம். அரிய செயல். உலகப் பொது மறையாய்த் தமிழர் திலகத் திரு விழியாய் இலகும் எம் அய்யன் வான்புகழ் வள்ளுவரை தேன்தமிழ் நினைவோடு இந்தோனேசியத்தில் இருக்கையிட்ட மாண்பினை வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம். வாழிய செந்தமிழ்… வாழ்க நற்றமிழர… ஆழிசூழ் உலகெலாம்… கவிக்கிறுக்கன் தேவகோட்டை முத்துமணி, ஜகார்தாவி்ல் இருந்து…

கருத்துகள்