படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தை, பக்க பலமாக இருக்கும் தாய் – சதுரங்க ராஜாவான பிரபஞ்சனின் கதை.... உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்று வரும் உலக செஸ் தற்போது இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள உள்ளார். அவர் இதற்க்கு முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா-வை அரையிறுதியில் வீழ்த்தி இன்று மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் மோதவுள்ளார். பிரக்ஞானந்தா இவர் 2005 ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை ரமேஷ் பாபு இவர் சிறுவயதிலே போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்டேட் கார்ப்ரேஷன் போலியோவால் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் தாய் நாகலட்சுமி இவர் தான் பிரக்ஞானந்தாவை செஸ் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்வார். இவருக்கு பக்கபலமாக இருந்தவர் இவரின் பயிர்ச்சியாளர் கிரான்ட் மாஸ்டர் ஆர்.பி ரமேஷ். இவருக்கு பயிற்ச்சியளிக்க மற்றவர்களிடம் வாங்குவதை விட குறைந்த அளவே கட்டணம் பெற்று வந்தார். இவர் முதலில் அவரது அக்காவை பார்த்து தான் செஸ் விளையாட ஆரம்பித்தார். 2022-ல் ஒரு பத்திரிக்கைக்கு அவர் தந்தை அளித்த பேட்டியில் எனது பையன் 3.5 அளித்த இருந்து செஸ் போட்டிகளை விளையாடி வருகிறார். அப்போது அவர் கூறுகையில் பிரக்ஞானத்தாவும் அவரது அக்காவையும் இனைத்து விளையாட வைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அவர் மேலும் கூறுகையில் எங்கள் குடும்பத்தில் பண நெருக்கடி இருந்தது ஆகையால் அவரை செஸ் விளையாட வைக்க வேண்டாம் என்று நினைத்தோம். அதன் பின் தான் ஆர்.பி ரமேஷ். இவருக்கு பயிற்ச்சியளிக்க மற்றவர்களிடம் வாங்குவதை விட குறைந்த அளவே கட்டணம் பெற்று வந்தார். அவர் பிரக்ஞானந்தாவிற்கு எந்த போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று பயிற்சி அளித்தார். அவருக்கு பிரக்ஞானந்தவிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதே அவருடைய நோக்கமாக இருந்து வந்தது. பிரக்ஞானந்தா 8 வயதிற்குட்பட்ட உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் இளைஞர் வென்றார். அதனைத் தொடர்ந்து பல போட்டிகளில் வென்றார். 2016-ல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், இளம்வயதில் சர்வதேச மாஸ்டர் என்ற புதிய வரலாற்றை படைத்தார். 2018 ஆம் ஆண்டில், அவர் 12 வயதில் 10 மாதங்கள் 13 நாட்களில், தனது இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆகின்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். அதன் பிறகு, அவரின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது, கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது தான். 2022 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் வீழ்த்திய அந்த வெற்றியை குறித்து அனைவரும் பாராட்டினார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரக்ஞானந்தாவைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து FTX கிரிப்டோ கோப்பை 2022-ல், 3-வது முறையாக கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வென்றார். தற்போது உலகக்கோப்பை 2023 ஆம் ஆண்டில், அரையிறுதிச் சுற்றில், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்

கருத்துகள்