சரியாக 11 மாதங்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அவர் செய்த மூன்று செயல்கள்தான் இன்றைக்கு வரைக்கும் தமிழகத் தலைவர்களும், மக்களும் அவரை மறக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறது. பல்லாண்டுகளாக பிரச்சினையில் இருந்த காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்காக நடுவர் மன்றத்தை அமைத்தது. இரண்டாவதாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று பிற்பட்டோர்களுக்கான இட ஒதுக்கிட்டை அமல்படுத்தியது. மூன்றாவதாக இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து விலக்கிக்கொண்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பிரதமர் பதவியை இழந்த பெருமகன் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று (25.06.1931)

கருத்துகள்