ொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !

தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி ! தொலையாத வார்த்தைகள் தமிழில் நிறைய தொன்றுத் தொட்டு வரும் வார்த்தைகள் அவை ! தொலைந்து வருகின்றன நாளும் இன்று தமிழில் தமிங்கிலம் தடையின்றிக் கலக்குது தந்தையை அப்பா என அழைப்பது இல்லை டாடி என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர் ! அன்னையை அம்மா என அழைப்பது இல்லை மம்மி என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர் ! மம்மி என்றால் செத்த பிணம் என்று பொருள் மடமையை அறிந்து மாற்றிக் கொள்ளுங்கள் ! தமிழில் ஒரு ஒருஎழுத்துக்கும் பொருள் உண்டு தரணியில் பிறந்த முதல் மொழி நம் தமிழ்மொழி ! தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை தன்னிகரில்லா சிறந்த மொழி நம் தமிழ்மொழி ! சொற்களின் சுரங்கம் களஞ்சியம் நம் தமிழ்மொழி சொக்கத்தங்கத்தைவிட மேலானது நம் தமிழ்மொழி ! வார்த்தைகளின் வற்றாத நதி தமிழ்மொழி வளங்கள் மிக்க வனப்பு மொழி தமிழ்மொழி! டாடி மம்மி வார்த்தைகளில் இல்லாது தொலையட்டும் தமிழகத்தில் தமிழே எங்கும் எல்லோரிடமும் ஒலிக்கட்டும் ! தொலையாத வார்த்தைகள் வரிசையில் என்றும் தமிழில் அம்மா அப்பா நிரந்தரமாக இருக்கட்டும் !

கருத்துகள்