முனைவர் அ.கோவிந்தராஜூ, 2, பாலாஜி நகர், கரூர்

26.5.23 காலை 10.00 மணிக்கு நம் கோடைப் பண்பலையில் ஒலிபரப்பான ‘வெளியில் வராத வெளிச்சங்கள்’ நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. பள்ளித் தேர்வில் தோல்வியுற்ற ஒருவரின் கவிதை பின்னாளில் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது என்னும் வியப்பான செய்தியைக் கேட்டு மிகவும் வியப்படைந்தேன். ஹைக்கூ கவிஞர் மதுரை இரா.இரவி அவர்களின் பன்முக ஆற்றலைப் படம்பிடித்துக் காட்டிய முத்திரை நிகழ்ச்சி இது என்றால் அது மிகையாகாது. முனைவர் அ.கோவிந்தராஜூ, 2, பாலாஜி நகர், கரூர்

கருத்துகள்