ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !

ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி ! தன் உடலில் ஓடும் இரத்தம் தானம் தந்ததால் கூடும் இரத்தமானது ! உயிர் காத்து உதவும் இரத்தமானது ! உதவியதால் கூடும் இரத்தமானது ! கொடுத்திடக் கூடும் இரத்தமானது ! கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது ! கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் ! கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் ! வழங்கிட ஊறும் இரத்தமானது ! வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு ! வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் ! வளமும் நலமும் தரும் இரத்ததானம் ! கர்ணனை நினைவூட்டும் காரணியானது ! கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது ! சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது ! சகோதரத்துவம் மனதில் விதைத்தது ! நான் என்ற அகந்தை அகற்றியது ! நாம் என்ற அன்பை உணர்த்தியது ! கொடுத்து சிவந்த கரம் என்பர் ! கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் ! பலர் இன்று உயிர் வாழ்வது ! சிலர் தந்த இரத்த தானத்தால் ! பல நேரங்களில் உயிர் காத்தது ! பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் ! இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு ! இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு ! உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் ! உலகம் போற்றும் தானம் இரத்ததானம் ! பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் ! பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் ! மனிதம் காக்கும் இரத்ததானம் ! மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் ! உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் ! ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் ! யாருக்குப் போகும் என்பது தெரியாது ! யாருக்காவது உறுதியாகப் போகும் ! பெற்றவர் மனதார வாழ்த்துவார் ! பெருங்கவலை விடுத்து வாழ்வார் ! சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து ! சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் ! மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் ! மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !

கருத்துகள்