என்றும் வாழ்வார் வ.உ.சி. கவிஞர் இரா.இரவி. !

என்றும் வாழ்வார் வ.உ.சி. கவிஞர் இரா.இரவி. ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் ! ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு புகழ் பல சேர்த்தவர் ! பள்ளிப்படிப்பை புனிதசேவியர் கால்டுவேலில் பயின்றவர் ! கல்லூரிப்படிப்பு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் முடித்தவர்! சட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளி நகரில் கற்றவர் ! சட்டம் முடித்து வழக்கறிஞர் பணி திறம்படயாற்றியவர் ! ஏழை மக்களுக்காக வழக்கறிஞராக உதவிகள் புரிந்தவர்! இனிய மகாகவி பாரதியாரோடு நட்புடன் பழகியவர் ! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை அன்றே விதைத்தவர் ! தொழிலாளர்களுக்கு வாரவிடுமுறையைப் பெற்றுத் தந்தவர் ! கப்பல் நிறுவனம் தொடங்கி கப்பலோட்டிய தமிழர் ! கப்பம் வசூலித்த ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமானவர் ! சுப்பிமணிய சிவாவிற்கு அடைக்கலம் தந்ததற்கு தண்டனை ! சுதேசி கப்பல் ஒட்டிய வீரத்துணிவிற்கு தண்டனை ! கோவை மைய சிறையில் செக்கிழுத்த செம்மல் ! கொடிய சிறைக்கு அஞ்சாத சிங்கமாக வாழ்ந்தவர் ! விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்தவர் ! விடுதலைக்காக விவேகமாகச் சிந்தித்த வேங்கை அவர் ! தமிழர்களுக்கு தமிழக பூங்காக்களுக்கு அவர் பெயர் ! தமிழக சாலைகள் தெருக்கள் அனைத்திலும் அவர் பெயர் ! கப்பலோட்டிய தமிழர் என்றால் தரணிக்கு விளங்கும் ! கப்பல்களைப் பார்க்கையில் தெரிவது அவர் முகம் ! உடலால் வாழ்ந்திட்ட ஆண்டுகள் அறுபத்திநான்கு ! புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது ! வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுங்கள் கணக்கில் அடங்காது ! கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் ! ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு புகழ் பல சேர்த்தவர் ! பள்ளிப்படிப்பை புனிதசேவியர் கால்டுவேலில் பயின்றவர் ! கல்லூரிப்படிப்பு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் முடித்தவர்! சட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளி நகரில் கற்றவர் ! சட்டம் முடித்து வழக்கறிஞர் பணி திறம்படயாற்றியவர் ! ஏழை மக்களுக்காக வழக்கறிஞராக உதவிகள் புரிந்தவர்! இனிய மகாகவி பாரதியாரோடு நட்புடன் பழகியவர் ! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை அன்றே விதைத்தவர் ! தொழிலாளர்களுக்கு வாரவிடுமுறையைப் பெற்றுத் தந்தவர் ! கப்பல் நிறுவனம் தொடங்கி கப்பலோட்டிய தமிழர் ! கப்பம் வசூலித்த ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமானவர் ! சுப்பிமணிய சிவாவிற்கு அடைக்கலம் தந்ததற்கு தண்டனை ! சுதேசி கப்பல் ஒட்டிய வீரத்துணிவிற்கு தண்டனை ! கோவை மைய சிறையில் செக்கிழுத்த செம்மல் ! கொடிய சிறைக்கு அஞ்சாத சிங்கமாக வாழ்ந்தவர் ! விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்தவர் ! விடுதலைக்காக விவேகமாகச் சிந்தித்த வேங்கை அவர் ! தமிழர்களுக்கு தமிழக பூங்காக்களுக்கு அவர் பெயர் ! தமிழக சாலைகள் தெருக்கள் அனைத்திலும் அவர் பெயர் ! கப்பலோட்டிய தமிழர் என்றால் தரணிக்கு விளங்கும் ! கப்பல்களைப் பார்க்கையில் தெரிவது அவர் முகம் ! உடலால் வாழ்ந்திட்ட ஆண்டுகள் அறுபத்திநான்கு ! புகழால் வாழும் ஆண்டுங்கள் கணக்கில் அடங்காது !

கருத்துகள்