படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.❣️🌹🌹
*மனைவி என்றால் அன்பின் இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்.*
🌷🌷
*பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்.*
💐💐
*ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால், பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்*.
🌼🌼
*பெண் என்கிற கிரீடம் அழகுதான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்.*
🌺🌺
*கணவர்கள் கொஞ்சம் கைகொடுங்கள் ! உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்.*!!
🍁🍁
*அன்பால் கொஞ்சுங்கள். சமையல் பணியில் பகிர்ந்து கொள்ளுங்கள்*
🌸🌸
*கை வலியோ உடல் வலியோ மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்.*
🍀🍀
*உங்கள் மகளை கவனிப்பது போல் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்.*
🌲🌲
*உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்.*
*சமையலை பாராட்டுங்கள் அவள் சமையல் அறையில் வெப்பம் தொட்ட தழும்பு பாருங்கள் அவை உங்களுக்காக ! அவள் பட்ட அன்பின் சின்னம். முடிந்தால் குட்டி முத்தம் கொடுங்கள், புண்கூட இனிக்கும்.*
*அவள் செய்வது சமையல் அல்ல. அன்பின் அழகு. தினசரி நன்றி சொல்லுங்கள். குறுந்தகவல் மனைவிக்கும் அனுப்பலாம்.*
🏻 🏻
*அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி. வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை.*
*கடவுள் நம்முடன் இருக்கமுடியாது என்பதற்காக கடவுள்கொடுத்த வரம் தான் அன்னையும் மனைவியும்.*
*அவள் கண்ணில் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.*
*மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.*
*புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை அழகாய் வாழலாம்.*
*
கருத்துகள்
கருத்துரையிடுக