படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி தீபிகா_சுரேஷ் 665 ஏதேனும் அலுவலகத்தில் அவளைக் காணும் போது எண்ணிப்பாருங்கள் உடல் நலம் சரியில்லாத பிள்ளையை வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கலாம் உறக்கம் இல்லா இரவைக் கடந்து வந்த அதிகாலையாய் இருக்கலாம் அவளுக்கு உடலியல் உளவியல் உபாதைகளால் சமைக்காமலோ சாப்பிடாமலோ கூட வந்திருக்கலாம் உடனிருப்பவனிடம் அடி உதை அவமானங்களைச் சுமந்து வந்திருக்கலாம் பேருந்து நெரிசலில் சில்மிஷ காரர்களிடம் சிக்கிக்கொண்ட சிரமமாய் இருக்கலாம் நேற்றைய அவளது விடுப்பு வாழ்வை வெறுமையாக்கிப் போன கணவனின் திதிக்காய் இருக்கலாம் செலவு செய்து சரி செய்ய முடியாத நோயின் கொடிய வலிகளைச் சகித்துக் கொண்டும் இருக்கலாம் குடும்பத்திற்கென தன்னைத்தானே தினந்தினம் சிலுவையில் ஏற்றிக்கொள்ளும் அவள்களை ஏதேனும் அலுவலகத்தில் காணும்போது சிறு தவறெனவோ தாமதமெனவோ சொல்லி வெறுப்பை வீசாதீர் வாழ்வோடு போராடும் தேவதைகளுக்கு வெறும் வார்த்தைகள் கூட கிடைப்பதில்லை ஆறுதலாய். #தீபிகா_சுரேஷ் 665

கருத்துகள்