வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி ! கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் ! கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் ! மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் ! மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் ! வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் ! வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் ! ஒப்பற்ற உயர்ந்த இனிய இலக்கியம் வள்ளுவம் ! ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் ! மனஇருளை நீக்கி அறிவு ஒளி தரும் வள்ளுவம் ! மனக்கவலை போக்கும் மருந்தாகும் வள்ளுவம் ! மனிதனை சிறந்த மனிதனாக்கும் வள்ளுவம் ! மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும் வள்ளுவம் ! வாசித்தவருக்கு வாழ்வியல் நெறி புகட்டும் வள்ளுவம் ! வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் ! அகிம்சை தத்துவம் போதிக்கும் வள்ளுவம் ! அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் ! நன்றியை மறக்காதீர் கற்பிக்கும் வள்ளுவம் ! நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் ! கல்வியின் சிறப்பை சித்தரிக்கும் வள்ளுவம் ! கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் ! தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே வள்ளுவம் ! தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் ! விலங்கு குணம் அறவே அகற்றிடும் வள்ளுவம் ! விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் வள்ளுவம் ! ஈடு இணையற்ற உலகப் பொதுமறை வள்ளுவம் ! எல்லோரும் போற்றிடும் பெட்டகம் வள்ளுவம் ! தமிழை அறியாதவரும் அறிந்தது வள்ளுவம் ! தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் !

கருத்துகள்