ுரட்சிக் கவிஞர் பாரதிதாசனின்.. புகழ்பெற்ற வரிகளில் சில மட்டும்...!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின்.. புகழ்பெற்ற வரிகளில் சில மட்டும்...! """""""""""""""""""""""'''''''''"""""""""""""""""""""""""""""""""""""""" புதியதோர் உலகம் செய்வோம்.! கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். * இருட்டறையில் உள்ளதடா உலகம்-- சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே. * தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர். * கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அதில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை. * கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம். * சாணிக்கு பொட்டிட்டு சாமியென்பார் செய்கைக்கு நாணி. உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு.! * எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. * தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூயநற்றமிழரை தமிழ்கொண்டெழுப்பினோம். * கொலை வாளினை எடடா-- மிகு கொடியோர் செயல் அறவே. *

கருத்துகள்