25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

25.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * நாத்திகத்தின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்? ஆன்மிகம் என்னும் வைரம் மின்ன பட்டை தீட்டும் அறமாக இருக்க வேண்டுமே தவிர...அதை அடித்து நொறுக்கும் சுத்தியாக இருக்கக் கூடாது. * கவர்ச்சி, ஈர்ப்பு என்ன வேறுபாடு? ஒப்பனைகள் தரும் கற்பனைகளால் உண்டாவது கவர்ச்சி. இதயங்கள் இயல்பாக இருப்பதால் ஏற்படுவது ஈர்ப்பு. * விழித்துப் படித்தால் வெற்றி சாத்தியமா? விழித்துப் படித்தால் மட்டும் போதாது; விழிப்புணர்வுடனும் படிக்க வேண்டும். * கால்களுக்குக் கூட வேர்கள் முளைக்க வாய்ப்புண்டா? மரத்துப்போன மனிதர்களுக்காகக் காத்திருந்தால் வேர்கள் முளைக்க வாய்ப்புண்டு. * 'கடனே' என்று வாழ்பவர்கள் யார்? கந்து வட்டிக்கடைக்காரர்கள். * கழுத்தறுக்கும் போட்டியில் யார் ஈடுபடுகிறார்கள்? கழுத்துக்கு மேல் காலியாக இருப்பவர்கள்.

கருத்துகள்