--ஆசிரியர் : முது முனைவர்.வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:9444012676, 044-24314347
ஆசிரியர் :
முது முனைவர்.வெ.இறையன்பு
--நூல் :தோன்றியதென் சிந்தைக்கே...
--முதல் பதிப்பு:மார்ச்-2021
--வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:9444012676, 044-24314347.
செல்வச் செழிப்பையும், வறுமை நிலையையும் மெழுகி சமமாக்கி விடுகிறது. இருளில் அழகும் அவலட்சணமும் மறைந்து விடுகின்றன.
* உண்மையில் பல பிசாசுகள் அதிக வெளிச்சத்தில்தான் நடமாடுகின்றன.
* இரவை இரவாகப் பார்க்க மனிதனுக்குச் சம்மதமில்லை.
* இருளில்லாத பகல் சாத்தியமா! வெளிச்சமே சகல நேரமும் வியாபித்தால் அனைத்து உயிர்களும் ஆவியாகி விடுமே! அப்போது எப்படிக் கேட்கும் பறவைகளின் பாடல், வண்டுகளின் ரீங்காரம், தேனீக்களின் ஓசை!
* பிறப்பே இருளில் தொடங்கும் விளையாட்டு. கருவறையின் இருட்டு வளர வைக்கிறது, கல்லறையின் இருட்டோ சிதைய வைக்கிறது.
* இருள் மேன்மையானது. மனத்தை அமைதிப்படுத்த கண்களை மூடி வெளிச்சத்தைத் தடை செய்கிறது. கண்களை மூடும்போதே இனிய இசையில் முழுமையாகக் கவனம் செல்கிறது.
* இருட்டு விழிப்புணர்வை அதிகரிக்கிறது. அதில் விரல்களே விழிகளாகி விடுகின்றன.
* தாயின் மடியைவிடச் சிறந்த தொட்டில் எது?
கருத்துகள்
கருத்துரையிடுக