18.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

18.4.2021 தேதியிட்ட ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * பொறுமையை வளர்த்துக்கொள்ள என்ன வழி? சில திரைப்படங்களை நகராமல் அமர்ந்து பார்த்தால் போதும். * சமூக அக்கறை எப்படித் தொடங்குகிறது? பக்கத்து வீட்டுக்கு உதவத் தொடங்குவதிலிருந்து! * குறிக்கோளும், நோக்கமும் ஒன்றுதானே! இல்லை. குறிக்கோள் என்பது, மனத்தின் அடியில் வேட்கையை வண்டலாய்ப் பதிவுசெய்யும் உந்துதல். நோக்கம் என்பது, பற்றில்லாத மகிழ்ச்சியை உள்ளடக்கியது. பரிசுக்காக வில்வித்தையைக் கற்பது குறிக்கோள். அம்பு எய்கிற சுகத்திற்காக வில்லை இயக்குவது நோக்கம். * சகிப்புத்தன்மை என்றால் என்ன? உள்ளுக்குள் கோபமாய்க் கொந்தளிப்பும்,கொதிப்பும்... வெளியே பாசாங்காய்ப் பூரிப்பும், சிரிப்பும். * 'கொட்டு', 'குட்டு' என்ன வேறுபாடு? கொட்டுவது முரசை. குட்டுவது தலையை. ஒன்றில் வருவது இசை; இரண்டாவதில் வருவது இம்சை. * சுற்றுலாவுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன தொடர்பு? சிலர் சுற்றுலா சென்றால் சுற்றுச்சூழலுக்குத் தலை சுற்றத் தொடங்கிவிடும்.

கருத்துகள்