ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347

ஆசிரியர் : முனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:044-24314347 சந்திக்க வருகிறவர்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி அவர்கள் அலைச்சலை வீணாக்காதவாறு நடந்துகொள்வது ஒருவகை முதிர்ச்சி. * அடுத்தவர் நேரத்தை மதிப்பது அவர்களை மதிப்பதன் அற்புத வெளிப்பாடு. * சுற்றுலாவின்போது பயணிகளுக்கு மாநிலத்தைப் பற்றிய முதல் மதிப்பீட்டை ஏற்படுத்துபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். * நதி உற்பத்தியாகுமிடம் சின்னதாகவே இருக்கிறது. * எல்லோரிடமும் நிறைவேறாதா என ஏங்கும் கனவுகள் நிறையவே இருக்கின்றன. * சில நேரங்களில் நாம் யாரை அறிமுகப்படுத்தி வைக்கிறோமோ அவர்களோடு இவர்கள் நெருக்கமாகி நம்மைக் கழற்றிவிடுவதும் உண்டு. * மனிதர்களைக் காரியங்களாகப் பார்க்கிறவர்கள் நேசிக்கப்படுவதில்லை. * அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் பேசத் தெரியாதவர்கள் அல்லர். --

கருத்துகள்