-முனைவர்.இறையன்பு அவர்கள், ---7-2-21 தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில்.
முதுமுனைவர்.இறையன்பு அவர்கள்,
7-2-21 தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில்.
*****************************************
* 'அகர முதல எழுத்தெல்லாம்...' என்ன பொருள்?
உலகு மட்டுமல்ல, எழுத்துகளும் இறைமையிடமிருந்தே தொடங்குகின்றன என்று பொருள்.உலகம் இல்லாவிட்டால் எழுத்துகளுக்கு என்ன வேலை!
** யாரைப் பார்த்துப் பொறாமைப்படலாம்?
யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படலாம்.
*** எழுத்து உன்னதமானதா?கழிவறையைச் சுத்தம் செய்வதும், களைகளை நீக்கம் செய்வதும், காகிதத்தை உற்பத்தி செய்வதும்கூட உன்னதமானவைதாம். செய்கிற தொழிலால் அல்ல; செய்கிற மனத்தால் செய்பவை உன்னதமாகின்றன. அதுவே 'செய்தொழில் வேற்றுமை'.
**** கவலையில்லாத மனிதர்களை எங்கே காணலாம்?
கல்லறைகளில்.
***** உலகம் அழியப் போகிறதா?
இனிமேல் அழிவதற்கு என்ன விட்டு வைத்திருக்கிறோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக