மண்ணும் மக்களும்* _வெ.இறையன்பு_ இந்நூலில் நேசத்த வரிகள்... ஞா.சந்திரன் கருத்துப் பூங்கா Karuthu Poonga-YouTube channel 9488008365

 



மண்ணும் மக்களும்* 

 _வெ.இறையன்பு_

இந்நூலில் நேசத்த வரிகள்...

ஞா.சந்திரன் 

கருத்துப் பூங்கா 

Karuthu Poonga-YouTube channel

9488008365



 *சிலருக்கு வீடு வெறும் வீடு; சிலருக்கோ வாழும் முறையில் அது வீடுபேறு!*

 _செங்கல்களால் ஆன கட்டடங்களை இதயங்கள்தாமே இல்லங்களாக்குகின்றன._

 *எதிரிகளாய் இருக்கும் பிராணிகள்கூட ஒன்றாய் வளர்ந்தால் ஒட்டக்கொள்ளும்;நெருக்கமாய் இருக்கும் மனிதர்கள் இருவர் அதிகம் ஒன்றாய் இருந்தால் வெட்டிக்கொள்வர்!*

 _விதையிடப்படாத வனங்களும் எழுதப்படாத மனங்களும் எண்ணற்ற ஆற்றலைத்தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன._

 *கொடுத்துப்பழகிய கைகளுக்கு கொடுக்க ஏதும் இல்லாமல் போகும்போது ஏற்படும் வலி மரணத்திலும் கொடுமையானது!*

 _நாம் நாற்றாக இருக்கிறபோது நம்மை நேசிக்கிற மனிதர்களைத்தான் மரமாக ஆனபிறகு கிளைகளில் ஊஞ்சலாடுகிறவர்களைவிட அதிகம் நேசிக்கிறோம்.நம்மை நமக்காகவே நேசித்தவர்கள் அவர்கள்._

...இதுபோன்ற இதயம் தொடும் கவித்துவமான சிந்தனைகள் பரவிக்கிடக்கின்றன. வாசிச்சு நேசியுங்கள்...



கருத்துகள்