முதுமுனைவர். இறையன்பு அவர்கள், ' வையத் தலைமைகொள் ! ' எனும் நூலில்.

 



முதுமுனைவர். இறையன்பு அவர்கள், 

 ' வையத் தலைமைகொள் ! ' எனும் நூலில்.



1)தலைமை என்பது அரசியலில் மட்டுமல்ல, ஆன்மிகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

(2)விவேகானந்தர், " தலையைத் தரத் தயாராக இருப்பவனே தலைவனாக முடியும் " என்றார். 

(3)உயிர்களைக் கொல்வதற்கு எதிரான முதல் குரல் ஓங்கி ஒழித்தது புத்தரிடமிருந்துதான்.

(4)புதிய பாதையைப் படைக்கும்போது ,  'கால்களில் முள் குத்துமே'என்று கவலைப்படுபவர்கள் காணாமல் போகிறார்கள். கணுக்கால்கள்வரை தேய்ந்து போனாலும் கவலைப்படாமல் அர்ப்பணிப்பவர்களே உலகில் சுழற்சியை மாற்றிக் காட்டுகிறார்கள்.

  (5)சைரஸ் என்கிற சொல்லுக்கு சூரிய வம்சத்தைச் சார்ந்தவன் என்கிற பொருளும் உண்டு.

------

கருத்துகள்