மௌனச் சிறை ! கவிஞர் இரா .இரவி !

     



மௌனச் சிறை !   கவிஞர் இரா .இரவி !


சிறையில் சிலவகை உண்டு அறிவோம்

சிலருக்கு தனி அறை சிறை உண்டு!


உடன் பேசிட ஒருவரும் இருப்பதில்லை

ஒன்று இரண்டு எல்லாம் அறைக்குள்!


தில்லையாடி வள்ளியம்மையை இப்படிச் சிறையில்

தண்டனை வழங்கி தண்டித்தார்கள்!


சிறையால் நோய் கண்டு மெலிந்தாள்

சில நாளில் இறந்திடுவாள் என விடுதலை தந்தனர்!


பார்க்க வந்த காந்தியடிகள் கேட்டார்

பெண்ணே என்னால் தானே துன்பம் என்றார்!


வருந்தவில்லை நீங்கள் அறிவித்தால் உடன்

விரும்பி சிறை செல்லத் தயார் என்றாள்!


நெகிழ்ந்து போனார் அண்ணல் காந்தியடிகள்

நெஞ்சுரமிக்க தில்லையாடி வள்ளியம்மையைக் கண்டு!


மௌன சிறையையும் மகிழ்வோடு ஏற்றாள்

மக்கள் மனங்களில் தில்லையாடி வள்ளியம்மை!


கருத்துகள்