வாழ்வின் நிசங்கள்! கவிஞர் இரா. இரவி



வாழ்வின் நிசங்கள்!


கவிஞர் இரா. இரவி

இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை
இன்பம் மட்டுமே நிரந்தரமாக யாருக்கும் இல்லை!

எனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று
எல்லோருமே புலம்பி தவித்து வாழ்ந்து வருகின்றனர்!

மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர்
மற்றவர்களைப் பார்த்து பெருமை கொள்ளுங்கள்!

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போலவே
வாசல்தோறும் வேதனை பல உண்டு!

என்னடா வாழ்க்கை என்று சலிப்பதை விடுத்து
எதையும் சமாளிப்பேன் என்று விரும்பி வாழ்ந்திடுக!

தோல்விகள் கண்டு துவண்டு விடக்கூடாது
தோல்விகள் நிரந்தரமன்று வெற்றி வந்து சேரும்!

ஒரே நாளி உயர்ந்து விட வாழ்க்கை
ஒன்றும் திரைப்படமல்ல உணர்ந்திட வேண்டும்!

மேடு பள்ளம் இரண்டும் உண்டு சாலையில்
மகிழ்ச்சி துன்பம் இரண்டும் உண்டு வாழ்க்கையில்

சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும்
சோர்வையும் சோம்பேறித்தனத்தையும் நீக்கிட வேண்டும்!

இழப்புகள் வரலாம் சோகங்கள் நிகழலாம்
எதையும் தாங்கிடும் உள்ளம் வேண்டும்!

நேர்வழியில் கிட்டிடும் பொருள் நிலைத்திடும்
நேர்மையற்ற வழியில் கிட்டுவது நிலைக்காது!

முடிந்தவரை பிறருக்கு உதவிட வேண்டும்
முடிவு கட்டிட வேண்டும் தன்னல வாழ்க்கைக்கு!  

கருத்துகள்